மேற்கு இந்திய பந்துவீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டது.
மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த ஆப்-ஸ்பின் பந்து வீச்சாளர் சுனில் நரைன் பவுலிங்கில் சந்தேகம் இருந்தது. இதையடுத்து அவரது பந்து வீசும் முறை குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ஆம் தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது சுனில் நரைன் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவது தெரியவந்தது. இதையடுத்து சுனீல் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு இன்று முதல் தடை விதித்து, சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைப்படி அனைத்து நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் சுனீல் நரைன் பந்துவீச தடைவிதிக்கப்படுகிறது. எனினும், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் கண்காணிப்பில், அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கலாம்.
எனினும், தனது பந்துவீச்சை குறித்து மறுபடியும் ஆய்வு மேற்கொள்ளுமாறு ஐ.சி.சியிடம் மேல்முறையீடு செய்வதற்கு சுனில் நரைனுக்கு வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக